×

மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசின் 2 அமைச்சர்கள் முன் 2 பேர் தீக்குளிக்க முயற்சி: இரு வேறு சம்பவத்தில் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசின் 2 அமைச்சர்கள் முன் இரு வேறு சம்பவத்தில் இரண்டு பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தில், சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்நவிஸ் தலைமையிலான பாஜக – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ேநற்று மாநிலம் முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆனால் பீட் மற்றும் துலே மாவட்டங்களில் பல்வேறு பிரச்னைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநில அமைச்சர்கள் முன்னிலையில் இரண்டு பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பீட்டில் வழியாக மாநில அமைச்சர் தத்தாத்ரேயா பார்னே மற்றும் அவரது கான்வாய் சென்று கொண்டிருந்த போது காரை வழிமறித்து நிதின் முஜ்முலே என்பவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.

உடனடியாக அவர் அப்புறப்படுத்தப்பட்டார். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பீட் நகராட்சி நிர்வாகத்தில் நடந்த மோசடி தொடர்பாக தலைமை நிர்வாக அதிகாரி நீட்டா அந்தாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துலேவில் நடந்த குடியரசு தின கொண்டாட்டங்களின் போது மாநில அமைச்சர் ஜெய்குமார் ராவல் முன்னிலையில் கொடியேற்றும் விழா நடந்தது. அப்போது வாவ்தியா பாட்டீல் என்ற நபர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அவரும் தடுக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஷிர்பூர் நகரில் உள்ள மாட்டு கொட்டகைகளில் இருந்து சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு செல்வதாகவும், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். இருந்தும் தற்கொலைக்கு முயன்ற பிரிவின் கீழ் வாவ்தியா பாட்டீல் கைது செய்யப்பட்டார்’ என்று கூறினர்.

The post மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசின் 2 அமைச்சர்கள் முன் 2 பேர் தீக்குளிக்க முயற்சி: இரு வேறு சம்பவத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,BJP coalition ,MUMBAI ,BJP ALLIANCE GOVERNMENT ,BJP ,Shivasena ,Devendra Budnavis ,BJP coalition government ,Dinakaran ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு