டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக, காசோலை மோசடி வழக்கில் கைது வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கதேச கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் (37). இவர், வங்கதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியில் எம்பியாக இருந்தவர். ரூ.2.5 கோடி மதிப்பிலான காசோலைகளை தந்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஷகிப் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post கிரிக்கெட் வீரர் ஷகிபுக்கு எதிராக கைது வாரண்ட் appeared first on Dinakaran.
