- பவானி
- சின்னத்தம்பி
- மாரியம்மாள்
- சிங்கம்பேட்டை, ஆனந்தம்பாளையம்
- அம்மாபேட்டை
- ஆனந்தம்பாளையம்
- மாரியம்மன்
- கோவில்
- மாரியம்மாள்…
பவானி, ஜன.18: அம்மாபேட்டை அடுத்துள்ள சிங்கம்பேட்டை ஆனந்தம்பாளையத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மனைவி மாரியம்மாள் (60). கூலித்தொழிலாளி. இவர், ஆனந்தம்பாளையம் மாரியம்மன் கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஸ்கூட்டர் எதிர்பாராமல் மோதியது. இதில், பலத்த காயமடைந்த மாரியம்மாளை மீட்ட அப்பகுதியினர் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து, அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post பைக் மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.
