இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் நடத்திய சோதனையில் மாடு வியாபாரிகள் இருவர் உள்பட 9 பேரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்ததாக 12 லட்சத்து 72 ஆயிரத்து 860 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 860 ரொக்கம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
The post பறக்கும் படை சோதனையில் ரூ.12.72 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.
