×

வயிற்று வலியால் துடித்த கூலி தொழிலாளி தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (52). கூலி தொழிலாளியான இவருக்கு, நீண்ட நாட்களாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

இதனால், கடந்த 6 மாதகாலமாக வயிற்று வலி மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இவர், அடிக்கடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக வயிற்று வலியால் உணவு அருந்தாமல் இருந்து வந்த கோவிந்தராஜ், கடந்த 11ம்தேதி இரவு 11 மணியளவில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்துள்ளார். இதனால், மயக்கம் அடைந்தவரை, குடும்பத்தினர் மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ், சிகிச்சை பலனின்றி கடந்த 12ம்தேதி இரவு பரிதாபமாக பலியானார். இதுகுறித்து, பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வயிற்று வலியால் துடித்த கூலி தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Govindaraj ,Mettuttheru, Klar ,
× RELATED புதுவை அருகே சுற்றுலா வந்தபோது வாலிபர் திடீர் சாவு