×

அகழாய்வில் சங்கு வளையல் மாவுக்கல் மணி கண்டெடுப்பு

ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 2,900க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் தோண்டப்பட்ட 17வது குழியில் பியான்ஸ் எனப்படும் பீங்கானால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களால் ஆன நீள் வட்டவடிவ மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், ‘‘இந்த பொருட்களை வட மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து முந்தைய தமிழர்கள் வாணிபத்தில் ஈடுபட்டுள்ளதும், இதன்மூலம் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் தெரிய வருகிறது’’ என்றார்.

The post அகழாய்வில் சங்கு வளையல் மாவுக்கல் மணி கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Ezhayirampannai ,Vijayakarishalkulam ,Vempakottai ,Virudhunagar district ,
× RELATED ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர்...