×
Saravana Stores

8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று 77,844 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27,418 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.27 கோடி காணிக்கை செலுத்தினர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை நிலவரப்படி திருமலைக்கு வரும் பக்தர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்து வருகின்றனர். பின்னர் காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Swami ,Tirupati Eyumalayan temple ,
× RELATED திருப்பதியில் தரிசன டிக்கெட் முன்பதிவு 60 நாட்களாக குறைப்பு?