×
Saravana Stores

கார் மீது வேன் மோதியதில் புதுவை தினகரன் பொதுமேலாளர் பலி

சென்னை: கார் மீது வேன் மோதிய விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் உயிரிழந்தார். புதுச்சேரி வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஹரி (33). தினகரன் நாளிதழ் புதுச்சேரி பதிப்பில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று முன்தினம் அலுவலக வேலையாக சென்னைக்கு சென்றார். பின்னர் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, மாலை தனது நண்பர் காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். அவரே காரை ஓட்டி சென்ற நிலையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் செட்டிநகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே புதுச்சேரியில் இருந்து மரக்காணம் நோக்கி அதிவேகமாக வந்த வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹரியை அங்கிருந்தவர்கள் மீட்டு கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஹரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தில் வேனில் இருந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டதால் அவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தகவலறிந்த மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு, ஏஎஸ்ஐ கிருஷ்ணன் தலைமையிலான போலீசார், வேன் டிரைவர் முருகதாஸ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த தினகரன் பொது மேலாளர் ஹரிக்கு மோனிகா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறந்த ஹரியின் உடல் அவரது சொந்த ஊரான பொன்னேரி, தடப்பெரும்பாக்கத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

The post கார் மீது வேன் மோதியதில் புதுவை தினகரன் பொதுமேலாளர் பலி appeared first on Dinakaran.

Tags : Newu Dinakaran ,Chennai ,Puduwa Dinakaran ,Hari ,Puducherry Vallalar ,New Dinakaran ,Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி