- பசும்பொன்
- எடப்பாடி
- குரு
- சென்னை
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- தீவார்
- Muthuramalingadevar
- Gurupuja
- குரு பூஜை விழா
சென்னை: முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவையொட்டி வரும் 30ம் தேதி தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார். இதுகுறித்து, அதிமுக தலைமைக்கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தேவரின் 117வது பிறந்தநாள் மற்றும் 62வது குருபூஜை விழாவையொட்டி வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து தலைமை கழக செயலாளர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் 30ம் தேதி எடப்பாடி மரியாதை appeared first on Dinakaran.