×
Saravana Stores

கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை: அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக நீடிப்பு

தேனி: தொடர்மழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவிக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆறு, சின்னாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை குற்றாலம் மூடப்பட்டது. தொடர்ந்து சின்னாற்றில் நீர்வரத்து வரும் நிலையில் சித்திரைசாவடி தடுப்பணையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அருகே உள்ள கிராமங்களுக்கு வெல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு அணைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் நேற்று மாலை வெல்ல பெருக்கு ஏற்பட்டது. எனவே அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலையில் நீர்வரத்து குறைந்ததால் அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

The post கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை: அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kumbakarai ,Theni ,Tamil Nadu ,Kumbakkarai ,Western Ghats ,Periyakulam ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை..!!