×

வரும் 27ம் தேதி நடக்கிறது தவெக மாநாடு ஏற்பாடு குறித்து காவல்துறை மீண்டும் நோட்டீஸ்

விக்கிரவாண்டி: நடிகர் விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாடு வி.சாலையில் வரும் 27ம் தேதி நடக்கிறது. மாநாடு குறித்து விஜய் கட்சிக்கு ஏற்கனவே 33 நிபந்தனைகளை விதித்த மாவட்ட காவல் துறை அதில் 17 நிபந்தனைகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என கூறியிருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் விஜய் கட்சியின் மாநாடு தொடர்பாக மேலும் சில நிபந்தனைகளை குறிப்பிட்டு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், மாநாடு நடைபெறும் நேரத்தில் தொடர் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மாநாட்டிற்கு வரும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு செய்துள்ள ஏற்பாடுகள் என்ன, தொண்டர்கள் வரும் வாகனத்தை நிறுத்தும் இடத்தை உறுதி செய்யப்படவில்லை, அதேநேரம் தொண்டர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடத்தை தேர்வு செய்து அதற்கான வரைபடங்களை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மாவட்ட வாரியாக எத்தனை வாகனங்கள், எந்தெந்த வகையான வாகனங்கள் வரவுள்ளது என்பதையும் முன்கூட்டியே காவல்துறைக்கு பட்டியலிட்டு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இந்த நோட்டீசை விக்கிரவாண்டி போலீசார் தவெக ஒன்றிய பொறுப்பாளார் ரமேஷிடம் வழங்கினர்.

The post வரும் 27ம் தேதி நடக்கிறது தவெக மாநாடு ஏற்பாடு குறித்து காவல்துறை மீண்டும் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Daveka Conference ,Vikravandi ,Vijay ,Thaveka Party ,V. Salai ,Vijay party ,
× RELATED தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு