×

19 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது: 5 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னை: மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை பெரம்பூர் சுரங்கப்பாதை உட்பட 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. பலத்த இடி மின்னலுடன் சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து அதிகாலையில் சற்று மழை விட்டது. அப்போது தான் சென்னைவாசிகளுக்கு நிம்மதி பிறந்தது என்று சொல்ல ேவண்டும். மழை விட்டதை பார்த்து பெருமூச்சு விட்டனர். சற்று இடைவெளியில் மீண்டும் காலை 6 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால், தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

மோட்டார் சைக்களில் அலுவலகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால், கார் போன்ற வாகனங்கள் வைத்திருப்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை பெரம்பூர் சுரங்கப்பாதை உட்பட 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. வியாசர்பாடி கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், மேட்லி, துரைசாமி, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் 17 சுரங்கப்பாதைகளில் வழக்கம்போல போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தண்ணீர் தேங்கவில்லை.

The post 19 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது: 5 சுரங்கப்பாதைகள் மூடல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Perambur tunnel ,Dinakaran ,
× RELATED சென்னை போரூரில் மழை காரணமாக மின்...