×
Saravana Stores

புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி


திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் புகையிலையில்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சி வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திருத்தணி அருகே புச்சிரெட்டிப்பள்ளியில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முரளி வரவேற்றார்.

இதில், புச்சிரெட்டிப்பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு புகையிலை தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி கிராம முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் மாணவர்கள், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு, புகையிலை இல்லா இளம் சமுதாயம் அமைப்போம் என்று தங்கள் கைகளில் பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Anti-Tobacco Awareness Rally ,Tiruthani ,Thiruvallur ,district ,public health and preventive medicine department ,Tobacco Prevention Awareness Rally ,Dinakaran ,
× RELATED மயானத்திற்கு செல்ல வசதி இல்லாததால்...