×
Saravana Stores

சுரங்கப்பாதை பராமரிப்பு பணி: ரயில் சேவை மாற்றம்

சென்னை: ஆரல்வாய்மொழி வட பணகுடி இடையே சுரங்கப்பாதை பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் அக்டோபர்.22 வரை தாம்பரம் வள்ளியூர் மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதியா ரயில் அக்டோபர்.23-ல் வள்ளியூரில் இருந்து மாலை 4.20-க்கு தாம்பரத்துக்கு இயக்கப்படும். திருச்சி- திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் எக்ஸ்பிரஸ் அக்டோபர்.23-ல்திருச்சி நெல்லை இடையே மட்டுமே இயக்கப்படும். மதுரை-புனலூர் இடையே இரவு 5.15-க்கு இயக்கப்படும் விரைவு ரயில் அக்.25-ல் மதுரை-நெல்லை இடையே இயக்கப்படும். புனலூர்-மதுரை இடையே மாலை 5.15-க்கு இயக்கப்படும் விரைவு ரயில் அக்.25-ல் நெல்லை மதுரை இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சுரங்கப்பாதை பராமரிப்பு பணி: ரயில் சேவை மாற்றம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Aralwaimozhi North ,Panagudi ,Tambaram ,Nagarkovil Antiodiya Express ,Valliyur ,Nagercoil ,Tambaram Antiodiya ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில்...