×

தஞ்சை அருகே கல்லூரி பஸ் மீது லாரி மோதி 2 பேர் பரிதாப பலி: 20 மாணவ, மாணவியர் காயம்

தஞ்சை: திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரத்தில் கல்லூரி பஸ் மீது பூ ஏற்றி சென்ற மினி லாரி மோதியதில் 2 வாலிபர் பலியாயினர். இதில் 20 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறை அருகே கோவிந்தபுரம் வழியாக கும்பகோணம் அடுத்த கள்ளப்புலியூரில் இயங்கும் தனியார் கல்லூரி பஸ் இன்று காலை சுமார் 8.20 மணியளவில் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பூ ஏற்றிக்கொண்டு கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற ஒரு மினி லாரி பயங்கர வேகத்துடன் எதிரே வந்த கல்லூரி பஸ் மீது மோதியது.

இதில் கல்லூரி பஸ்சின் முன் பக்கத்தின் உள்ளே மினி லாரி சிக்கிக்கொண்டது. தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் போலீசார் 2 ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்து பஸ்சில் சிக்கிக்கொண்ட மினி லாரியை அப்புறப்படுத்தினர். இதில் இடிபாட்டில் சிக்கி மினி லாரியிலிருந்த முகமது சமீர்(25) மற்றும் கார்த்தி (28) ஆகியோர் பரிதாபமாக பலியாயினர். மேலும் கல்லூரி பஸ்சில் இருந்த 20 மாணவ, மாணவியர் காயமடைந்தனர். பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post தஞ்சை அருகே கல்லூரி பஸ் மீது லாரி மோதி 2 பேர் பரிதாப பலி: 20 மாணவ, மாணவியர் காயம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Govindapuram ,Thiruvidaimarudur ,Tanjore district ,Thiruvidaimarudur taluk ,Aduthurai ,Kumbakonam ,Tanjore ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அருகே மினி லாரி மீது தனியார் கல்லூரி பஸ் மோதி 2 பேர் பரிதாப பலி