×
Saravana Stores

மின்சாரம் தாக்கி சிறுமி பலி

*திட்டக்குடி அருகே சோகம்

திட்டக்குடி : திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் காயத்ரி(13). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமி நேற்று காலை 6.30 மணியளவில் வீட்டிற்கு எதிரே உள்ள காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை கையால் எடுத்தபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மின்சாரம் தாக்கி சிறுமி பலி appeared first on Dinakaran.

Tags : Thittakudi ,Govindaswamy ,Ramanatham Main Road ,Gayatri ,Perambalur ,
× RELATED தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை மாயம்: போலீசில் மணப்பெண் புகார்