×
Saravana Stores

வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: உத்தமத் தியாகிக்குத் தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு: “வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம். அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல.

ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்” – எனப் பேரறிஞர் அண்ணா நெக்குருகப் போற்றிய விருதுநகர் சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ என்ற பெயர்பெற 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து தம் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று. அந்த உத்தமத் தியாகிக்குத் தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Veerathiaki ,Chief Minister ,M.K.Stalin Dwitt ,Chennai ,M. K. Stalin ,Uttamad Tyagi ,Sankaralinganar ,M.K. Stalin ,
× RELATED மழை இடைவிடாது பெய்வதால் தொடர்ந்து...