×

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

சென்னை: அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பூவிருந்தவல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், எறும்பு மருந்தை சாப்பிட்டுள்ளார். சுய நினைவை இழந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக ரத யாத்திரையாக மதுரை வந்தார் அத்வானி. மறுநாள் மதுரையில் இருந்து ராஜபாளையம் வழியாக கேரளா செல்லத் திட்டமிட்டிருந்தார் அவரது பயணத் திட்டத்தை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த தீவிரவாதிகள், அவர் செல்லும் பாதையில் முன்கூட்டியே சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டை திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் தரை பாலத்திற்கு அடியில் பதுக்கி வைத்தார்கள். அதிகாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 2 பேர், போலீஸுருக்கு தகவல் கொடுத்ததால், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் சதித்திட்டத்தில் பங்கேற்றதுடன், பைப் வெடிகுண்டு தயாரிக்க பைப் வாங்கிக் கொடுத்ததாக ஜாகீர் உசேனை கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து ஷாகிருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பே நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. எனினும், அதற்கான உத்தரவாத ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாததால் ஷாகிர் சிறையிலேயே உள்ளார். இந்த விரக்தியில் பூவிருந்தவல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷாகிர் எறும்பு மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

The post அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Shahir ,Advani ,Madurai ,Chennai ,Shakir ,Poovindavalli ,Stanley Government Hospital ,
× RELATED அத்வானி மதுரை வருகையின் போது...