×

ஒடிசா பெண் தற்கொலை

திருப்பூர், செப். 17: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி பவித்ரா (25). இவர்கள் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன் குடியேறி பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர். சந்தோஷ் ஏற்கனவே பவித்ராவின் சகோதரியையும் திருமணம் செய்து 3 பேரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், பவித்ராவின் சகோதரி ஊருக்கு சென்ற நிலையில் சந்தோஷ் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்த போது பவித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஒடிசா பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Santosh ,Odisha ,Pavitra ,Chamundipuram ,Banyan Company ,
× RELATED சாலை பாதுகாப்புக்காக பள்ளி பகுதிகளில் வேகத்தடைகள் அமைப்பு