×

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்கி 27ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் தகுதியான மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்நிலையில், காலியாகவுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் நேற்று தொடங்கியது.

வரும் 13ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். 14ம் தேதி பகல் 12 மணி முதல் 16ம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும். வரும் 17ம் தேதி தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இடஒதுக்கீடு விவரங்கள் 19ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர் 26ம் தேதி பகல் 12 மணி வரை இட ஒதுகீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 26ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : MBBS ,BDS ,CHENNAI ,
× RELATED பிரதமர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்