×

இயற்கை விவசாய பொருட்கள் விற்பனை தொடக்கம் இயற்கை வேளாண் விளைபொருட்களை பயன்படுத்துவதால் உடலுக்கு ஆரோக்கியம்

*கலெக்டர் பேச்சு

திருப்பதி : இயற்கை வேளாண் விளைபொருட்களை பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியத்திற்கு பயன் கிடைக்கும் என்று கலெக்டர் பேசினார். திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இயற்கை விவசாயப் பொருட்களின் விற்பனையை கலெக்டர் வெங்கடேஷ்வர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் பிரச்னை தீர்க்கும் மேடைக்கு வருகிறார்கள். விவசாயப் பொருட்களில் இருந்து காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை விவசாயிகள் வாங்கி, விவசாயிகளுக்கு ஆதரவளித்து, ஆரோக்கியமான முறையில் விளையும் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தில், தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல், இயற்கை உரங்கள் மூலம் பாரம்பரிய விவசாய முறைகள் மூலம் ஆரோக்கியமான பொருட்கள் வளர்க்கப்படுகின்றன, அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனடையலாம் என்றும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என கூறினார்இந்நிகழ்ச்சியில், கலெக்டருடன் அதிகாரிகள் பலர் காய்கறிகள், கீரைகளை வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண் அலுவலர் பிரசாத ராவ், மாவட்ட இசட்பிஎன்எப் டிபிஎம் சண்முகம், ஏபிஎம்ஐபி பி.டி.சதீஷ், மாவட்ட கால்நடை பராமரிப்பு அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post இயற்கை விவசாய பொருட்கள் விற்பனை தொடக்கம் இயற்கை வேளாண் விளைபொருட்களை பயன்படுத்துவதால் உடலுக்கு ஆரோக்கியம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Collector ,Venkateshwar ,Tirupati Collector ,
× RELATED திருப்பதி மாவட்டத்தில் அதிகாரிகள்...