×

பேரையூர் அருகே நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர் கைது

பேரையூர், செப். 10: பேரையூர் அருகேயுள்ள பாப்புரெட்டிபட்டி காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் காலனியானது ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டு பகுதியில் இருப்பதால் சிலரது வீட்டில் இரவு பாதுகாப்பிற்காக வளர்ப்பு நாய்கள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் காலனி அருகே பாப்புரெட்டியபட்டியை சேர்ந்த முத்துராஜன் (49) என்பவர் அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது செங்கல் அறுக்கும் பணியின் போது ஈர செங்கல் மீது நாய்கள் ஏறி நடந்து ஓடுவதால் அதில் அதன் காலடி தடம் விழுந்து பணிகள் பாதிப்படைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜன் மாமிச குடலில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் குருனை மருந்தை தடவி அப்பகுதியில் போட்டதாக தெரிகிறது. இதனை சாப்பிட்ட ஒவ்வொரு நாய்களும் அப்பகுதியில் இறந்து கிடந்தன. இதுவரை கண்டெடுக்கப்பட்ட 8 நாய்களின் உடல்களை பேரையூர் கால்நடை மருத்துவர் வீரபுத்திரன் பிரேத பரிசோதனை செய்தார். மேலும் பாகங்கள் அறிவியல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் முத்துராஜனை கைது செய்தனர்.

The post பேரையூர் அருகே நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,Pappurettipatti Colony ,Dinakaran ,
× RELATED உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்