×

பள்ளியில் ஆன்மிகம் என்ற பெயரில் அநாகரிகம்: கிருஷ்ணசாமி கண்டனம்

சென்னை: சென்னை அசோக் நகர் பள்ளியில் “ஆன்மிகம்” என்ற பெயரில்
நடந்தது அநாகரிகத்தின் உச்சம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கல்விக் கூடங்களில் சாதி, மத, மூட நம்பிக்கையை ஒழிக்க சந்துரு பரிந்துரையை செயல்படுத்த அரசாணையை அமல்படுத்தவேண்டும். சொற்பொழிவு என்ற பெயரில் பேசிய பேச்சு ஆன்மீக நெறி என சொல்வதற்கு அணு அளவும் தகுதியற்றது. இது போன்ற நபர்களை பள்ளி, கல்லூரிக்கு அழைத்துப் பேச அனுமதிப்பது ஆன்மீகத்துக்கும் அறநெறிக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

The post பள்ளியில் ஆன்மிகம் என்ற பெயரில் அநாகரிகம்: கிருஷ்ணசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Krishnasamy ,Chennai ,New Tamil Nadu Party ,Ashok Nagar school ,Chanduru ,Kṛṣṇasamy ,
× RELATED சங்கரன்கோவில் அருகே அதிமுக நிர்வாகி...