×

சாலையில் உள்ள மனநலம் பாதித்தவர்கள்: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை

சென்னை: சாலைகளில் திரியும் மனநலம் பாதித்தவர்களை மீட்டு உரிய சிகிச்சை தர எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தர தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனநலம் பாதித்தவர்களை மீட்டு சிகிச்சை தர எடுத்த நடவடிக்கை குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய 2009-ல் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை தமிழ்நாடு முழுவதும் முறையாக அமல்படுத்தவில்லை என கே.வி. ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

The post சாலையில் உள்ள மனநலம் பாதித்தவர்கள்: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை