×

முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதை இல்லாததால் ஆளுநர் ஏமாற்றம்: மதுரை எம்பி கிண்டல்

மதுரை: சென்னை, சேத்துப்பட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியபோது, ‘‘மாநில பாடத்திட்டம் தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மோசமாக உள்ளது’’ என்றார். இதற்கு, பல்வேறு தரப்புகளிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

இதுகுறித்து, மதுரை எம்பி சு.வெங்கடேசன், எக்ஸ் தளத்தில், ‘‘பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு’’ என்று தெரிவித்துள்ளார்.

 

The post முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதை இல்லாததால் ஆளுநர் ஏமாற்றம்: மதுரை எம்பி கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Governor ,Modi ,Madurai ,Tamil Nadu ,RN Ravi ,Sethupat, Chennai ,
× RELATED எதிர்க்கட்சியினர் போல் செயல்படுவது...