×

தேர்வுத்தாள் விடைகள் மீது முறையீடு செய்ய அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முகத் தேர்வு) அடங்கிய பதவிகளுக்கான தேர்வு கடந்த மாதம் 12, 19, 20, 21 ஆகிய நாட்களில் கணினி வழித் தேர்வாக நடத்தப்பட்டது. இதில் கடந்த மாதம் 19ம் தேதி, 20ம் தேதி மற்றும் 21ம் தேதி அன்று நடந்து முடிந்த தாள்-2க்கான (20 பாடங்கள்) உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் வரும் 9ம் தேதிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள “ஆன்சர் கீ சேலன்ஜ்” என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்யலாம். அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post தேர்வுத்தாள் விடைகள் மீது முறையீடு செய்ய அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Tamil Nadu Public Service Commission ,A. John Lewis ,
× RELATED குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில்...