×

பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை சமாளிக்க தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க திட்டம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் கூட்ட நேரிசல் ஏற்படுகிறது. இதனை சமாளிக்க தனியார் பேருந்துகளை வாடகை எடுக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் அதிக தேவையுள்ள நேரங்களில் தனியார் பேருந்துகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. தொடர் விடுமுறைகள் மற்றும் பண்டிகை நாட்களில் போன்ற உச்சபட்ச பயண நேரங்களில் அதிகரித்து வரும் அரசு பேருந்துகளுக்கான தேவையை நிவர்த்தி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்துகள் சென்னை மற்றும் அருகிலுள்ள 10 மாவட்டங்களில் இயக்கப்படும். அவற்றை தனியார் ஓட்டுநர்கள் இயக்குவார்கள். இந்தத் திட்டத்திற்கான டெண்டர் விரைவில் இறுதி செய்யப்படும். இந்த பேருந்துகள் ஆண்டுக்கு 10 முதல் 15 நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.அரசுப் பேருந்துகளை சிறப்புப் பேருந்துகளாக பயன்படுத்துவதால், அவர்கள் சென்னைக்குத் திரும்புவதற்கோ அல்லது தங்கள் இடங்களுக்குச் செல்வதற்கோ நேரம் எடுக்கும்போது தாமதம் ஏற்படுகிறது.

இதுபோன்ற இடையூறுகளைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, கிலோமீட்டர் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிக்க அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். கட்டணத்தில் மாற்றம் ஏதும் இருக்காது, அரசு போக்குவரத்து கழகத்தின் வழித்தடத்தில்தான் பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பயணிகளிடையே குழப்பத்தைத் தவிர்க்க தனியார் பேருந்துகளில் விழுப்புரம் கோட்டத்தின் லோகோ இடம் பெற்றிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை சமாளிக்க தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க திட்டம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,CHENNAI ,Diwali ,Pongal ,Tamil Nadu State Transport Corporation ,department ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை,...