×

காரிமங்கலம் அருகே பாம்பு கடித்து சிறுமி சாவு

தர்மபுரி, செப். 1: காரிமங்கலம் அருகே உள்ள காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் பிருந்தா (9). பெரும்பாலை சாமியார்கொட்டாய் பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 16ம்தேதி, பிருந்தா பாட்டியுடன் சொசைட்டிக்கு பால் ஊற்றுவதற்காக விவசாய தோட்டத்தின் வழியாக சென்றபோது, பிருந்தாயை பாம்பு கடித்துவிட்டது. வலியால் அலறிய சிறுமியை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனை சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, பிருந்தா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காரிமங்கலம் அருகே பாம்பு கடித்து சிறுமி சாவு appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Dharmapuri ,Sinnasami ,Kamalapuram ,Brinda ,Samiyarkotai ,
× RELATED பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை அதிகாரிகள் ஆய்வு