×

உக்ரைன் அதிபரின் போர் முடிவு; திட்டத்தை புறந்தள்ளிய ரஷ்யா: சண்டை நீடிக்கும் என அறிவிப்பால் தொடர் பதற்றம்

மாஸ்கோ: உக்ரைன் அதிபர் ெஜலன்ஸ்கியின் போர் முடிவு திட்டத்தை ரஷ்யா புறந்தள்ளியுள்ளது. சண்டை நீடிக்கும் என்ற அறிவிப்பால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே 2 வருடங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்நிலையில்தான் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவம் 3 வாரங்களுக்கு முன் நுழைந்தது. அங்குள்ள ஏராளமான குடியிருப்பு பகுதிகளை தங்கள் வசப்படுத்தியது. மேலும் ரஷ்ய ராணுவ வீரர்களையும் பிடித்து வைத்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை மேலும் வலு பெற்றுள்ளது.

இந்நிலையில்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி “தனது திட்டத்தை (திட்டத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை) அமெரிக்க அதிபர் முன் எடுத்து வைப்பேன். விரைவில் அதிபராக இருப்பவர்களிடமும் எனது திட்டத்தை கூறுவேன். ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியது எனது திட்டத்தின் ஒரு பகுதி. இது பொருளாதாரம் மற்றும் டிப்ளோமேடிக் ஆகியவற்றை உள்ளடக்கியாகும். அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யாவின் உள்பகுதிகளை தாக்க அமெரிக்காவிடம் அனுமதி கேட்பேன். இதன் மூலம் ரஷ்யாவை போர் முடிவுக்கான பேச்சுவார்த்தைக்கு தள்ள முடியும். இதுதான் என்னுடைய யோசனை’ என்று தெரிவித்திருந்தார்.

ஜெலன்ஸ்கி திட்டம் குறித்த கேள்விக்கு ரஷ்யா அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘எங்களது இலக்கை அடையும் வரை உக்ரைன் மீதான சண்டை தொடர்ந்து நடைபெறும். உக்ரைனின் பிரதிநிதிகளிடமிருந்து இதுபோன்ற அறிக்கைகளை கேட்பது இது முதல் முறை அல்ல. இந்த கீவ் ஆட்சியின் தன்மையை நாங்கள் அறிவோம்’ என்றார். தற்போது உக்ரைன் படைகளை குர்ஸ்க் பிராந்தியத்தில் வெளியேற்றுவது ரஷ்யாவின் முதன்மையாக நோக்கமாகும். உக்ரைன் ஊடுருவலை தொடர்ந்து ரஷ்யா தாக்குதலை அதிகரித்துள்ளது.

The post உக்ரைன் அதிபரின் போர் முடிவு; திட்டத்தை புறந்தள்ளிய ரஷ்யா: சண்டை நீடிக்கும் என அறிவிப்பால் தொடர் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,President ,Dzhalansky ,Ukraine ,Dinakaran ,
× RELATED ரஷ்ய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு