×

நத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு: போலீசார் விசாரணை

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நத்தம் அருகே செந்துறை சாலை கலைநகர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் வழக்கமான வேலைக்கு செல்வதற்கு வந்து கொண்டிருந்த போது சாலையின் அருகே உள்ள முட்புதருக்குள் 20க்கும் மேற்பட்ட சணலால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகள் சிதறி கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். குடியிருப்பு பகுதி அருகில் நாட்டு வெடிகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டுகள் சிதறிக்கிடந்த இடத்தின் அருகிலேயே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, குடியிருப்புகள் உள்ளன. நேற்று நத்தம் அருகே வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், குடியிருப்பு பகுதியில் சிதறி கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post நத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Natham ,Nattam ,Dindigul district ,Kalanagar ,Sentura road ,Dinakaran ,
× RELATED சிறுமியை துப்பாக்கியால் சுட்டு காதலன் தற்கொலைக்கு முயற்சி