×

சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி

பூந்தமல்லி: பாடகர் மனோவின் மகன்கள் மதுபோதையில் தாக்கிய விவகாரத்தில் 16 வயது சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து கல், கட்டையால் மனோவின் மகனை தாக்குவதும், இருதரப்பும் தாக்கும் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருபாகரன் (20). மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் கடந்த 10ம் தேதி இரவு வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் கால்பந்து பயிற்சி செய்து விட்டு வந்துள்ளனர்.

அப்போது பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர், அவரது நண்பர்கள் சேர்ந்து கிருபாகரனையும் 16 வயது சிறுவனையும் தாக்கியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதில் மனோவின் மகன்களின் நண்பர்கள் விக்னேஷ் (28), தர்மா (26), ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தலைமறைவாக உள்ள மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மனோவின் மகன்கள் தரப்பிலும் தங்களை தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறுவர்களை மனோவின் மகன்கள் போலீசார் முன்னிலையில் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாடகர் மனோவின் மகன்கள் ஜாகீர், ரபீக் ஆகியோரை 4 பைக்குகளில் வந்த 8 பேர்கள் சேர்ந்து உருட்டு கட்டை, கற்களைக் கொண்டு தாக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த விடியோவில் மனோவின் மகன்கள் இருவரையும் 16 வயது சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து கல், கட்டையால் தாக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

The post சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி appeared first on Dinakaran.

Tags : Mano ,Poontamalli ,Kriubakaran ,Alappakkam.… ,
× RELATED மதுபோதையில் கால்பந்து பயிற்சி...