×

பிஎஸ்என்எல்லில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: மதுரை மண்டல பொது மேலாளர் தகவல்

 

மதுரை, ஆக. 21: மதுரை தொலை தொடர்பு வட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் லோகநாதன் நேற்று கூறியதாவது: பிஎஸ்என்எல் நிறுவனம் முழுக்க முழுக்க மக்களுக்காகவே சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதியை பிஎஸ்என்எல் 4ஜி வழங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் எம்.என்.பி மூலம் வருவோர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு பத்து பேர் மட்டுமே வந்தனர்.

தற்போது பிஎஸ்என்எல் சேவைக்கு நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பிஎஸ்என்எல்லுடன் இணைந்து வருகின்றனர். தற்போது மும்மடங்கிற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பிஎஸ்என்எல் சேவையில் இணைந்து வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் தினமும் பணி செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

The post பிஎஸ்என்எல்லில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: மதுரை மண்டல பொது மேலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : BSNL ,Madurai Zone ,General ,Madurai ,Madurai Telecommunication Circle ,General Manager ,Loganathan ,
× RELATED பிஎஸ்என்எல் சேவைகள் விற்பனை உரிமம்...