×

கட்டாரிமங்கலம் கோயிலில் பாலாலய பாலஸ்தாபனம்

சாத்தான்குளம், செப். 17: கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோயிலில் திருப்பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு பாலாலயபால ஸ்தாபனம் நடைபெற்றது. சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற இருப்பதால் விமானம் முதல் மூலஸ்தானம் வரை அனைத்து விக்ரஹங்களுக்கும் சலனம் செய்யாமல் பாலாலய பாலஸ்தாபனம் நடைபெற்றது. காலை 5 மணி முதல் ஹோமம், காலை 7.45 முதல் 8.45 மணிக்குள் பாலாலய பாலஸ்தாபனம் நடைபெற்றது.

சிவ ஆகம முறைப்படி பாலாலய நிகழ்ச்சியை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அர்ச்சகர் குமார் சிவாச்சாரியார் நடத்தினார். இதையடுத்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அனைத்து சிறப்பு பூஜைகளும் சிறப்பாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சதீஷ், அறங்காவலர் குழு தலைவர் நடராஜபிள்ளை மற்றும் அறங்காவலர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

The post கட்டாரிமங்கலம் கோயிலில் பாலாலய பாலஸ்தாபனம் appeared first on Dinakaran.

Tags : PALALAYA PALESTINE ,KATARIMANGALAM TEMPLE ,Satankulam ,Palalayapala ,Katarimangala Temple ,Ashtapanthana Maha ,Kumbapishekha ,Sivagami Ambala Sameda Aesthetic Temple ,Satankulam, Katarimangalam ,Palalaya ,Palastapana ,
× RELATED மழைக் காலத்தில் தண்ணீர் புகுவதை...