×

திருவள்ளூர் பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்

திருவள்ளூர்: திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் பத்மாவதி தாயார் சமேத, பிரசன்ன ஸ்ரீவெங்கடேச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த உற்சவத்தை முன்னிட்டு பிரசன்ன ஸ்ரீவெங்கடேச பெருமாள் கருட வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை தரிசித்தனர். மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள் பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த கருட சேவைக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காரும், செயல் அலுவலருமான ஏ.பிரகாசம் மற்றும் கோயில் நிர்வாகிகள், விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

The post திருவள்ளூர் பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Garuda Seva Utsavam ,Tiruvallur Perumal Temple ,Thiruvallur ,Padmavathy ,Prasanna Srivenkatesa Perumal temple ,Satyamurthy Street, Thiruvallur ,Avani Pournami ,Prasanna Srivenkatesa Perumal ,Garuda Vahanam ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்...