ஈரோடு: ஈரோட்டில் பல் மருத்துவர் வீட்டில் நகை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் பல் மருத்துவர் பழனிசாமி வீட்டில் 219 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சென்னையைச் சேர்ந்த அகில்குமார், தனசேகர் ஆகிய இருவரை கைது செய்து 149 சவரன் நகை மீட்கப்பட்டது. மேலும் தலைமறைவாக இருந்த நரேந்திரனை திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர்.
The post ஈரோட்டில் மருத்துவர் வீட்டில் கொள்ளை: மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.
