×

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராக சாலீ எஸ்.நாயர் நியமனம்

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச்செயல் அதிகாரியாக சாலீ எஸ்.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வங்கியில் இணைந்த நாளிலிருந்து 3 ஆண்டுகள் இந்த பதவியை வகிப்பார். இதுகுறித்து சாலீ எஸ்.நாயர் கூறுகையில், ‘‘தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இது போன்ற ஒரு முக்கியமான நேரத்தில் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். எனது முன்னோடிகளால் அமைக்கப்பட்ட வலுவான அடித்தளத்தில் கட்டமைக்கவும், வங்கியின் மூலோபாய முன்னுரிமைகளை முன்னெடுத்துச்செல்லவும், குழு, நிர்வாகக்குழு மற்றும் அனைத்து ஊழியர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்” என்றார்.

பாரத ஸ்டேட் பேங்க் துணை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை கடன் அதிகாரியாக பணியாற்றிய சாலீ, வங்கி மற்றும் நிதிச்சேவைத்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். தனது நிபுணத்துவத்தின் ஒரு செழுமையையும் வெற்றியின் நிரூபிக்கப்பட்ட சாதனைப்பதிவையும் டிஎம்பி நிர்வாகத்திற்கு கொண்டு வருகிறார். அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் துறையில் முதுகலை பட்டதாரியான சாலீ, 1987ல் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக சேர்ந்து வங்கிப்பணியை தொடங்கினார்.

கடந்த 35 ஆண்டுகளில் சாலீ, ரிலையன்ஸ் (முகேஷ் குழுமம்) நிறுவனத்தின் மாறுபட்ட குழுக்கள் மற்றும் எஸ்ஸார் குழுமம் உட்பட பெரு நிறுவனங்களை நிர்வகிக்கின்ற பல்வேறு பணிகளைக் கையாண்டுள்ளார்.
கூடுதலாக, எஸ்பிஐ-இன் இன்டர்நேஷனல் பேங்கிங் குழுவில் 2 பதவிகளை வகித்தார். முதலில் நியூயார்க்கிலும் பின்னர் சிட்னியில் ஆஸ்திரேலிய செயல்பாடுகளுக்கும் தலைமை வகித்தார். அவர் ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தின் கிளைகளை இந்த வங்கிக்காக நிர்வகித்து சில்லரை வணிகத்திலும் பணியாற்றினார்.

மேலும் ஸ்டேட் பேங்க் ஆப் பிகானர் & ஜெய்ப்பூரை எஸ்பிஐ உடன் இணைப்பதில் ஈடுபட்டார்.சாலீ பிரச்னைக்குரிய சொத்துக்களை நிர்வகிப்பதில் விரிவான அனுபவத்தைக் கொண்டவர், அவர் ஜூலை 2017ல் வங்கியின் ஸ்ட்ரெஸ்ட் அஸெட் வெர்டிகல் தலைமை பொது மேலாளராக பொறுப்பேற்றார், அங்கு அவர் மறுசீரமைப்பு/ஐபிசி /சமரசம்/ ஏஆர்சி விற்பனைப்பாதை ஆகியவற்றின் மூலம் என்பிஏவைத் தீர்ப்பதில் ஈடுபட்டிருந்தார்.

ஏப்ரல் 2020ல், ஸ்ட்ரெஸ்ட் அஸெட்ஸ் ரிசொல்யூசன் குரூப் துணை நிர்வாக இயக்குநராக சாலீ பொறுப்பேற்று, செப்டம்பர் 2021 வரை அந்தப்பொறுப்பில் இருந்தார். பின்னர் அக்ரிகல்ச்சர் அண்ட் பினான்சியல் இன்க்ளுசன் வெர்டிகல், எஸ்எம்இ-இன் பொறுப்பு துணை நிர்வாக இயக்குநராக, செப்டம்பர் 21 முதல் ஜூலை 22 வரை பணியாற்றினார். முன்னதாக மே 24 வரை டிஎம்டி மற்றும் எஸ்பிஐ-இன் தலைமைக்கடன் அதிகாரியாக, கடன் போர்ட்போலியோவை நிர்வகிப்பதற்கான பொறுப்பு வகித்துள்ளார்.

 

The post தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராக சாலீ எஸ்.நாயர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Sally S. Nair ,Tamil Nadu Mercantile Bank ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி