×

மின்கம்பத்தில் கார் மோதி பெண் எஸ்ஐ படுகாயம்

ஆற்காடு: ஆற்காட்டில் மின்கம்பத்தில் கார் மோதியதில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் உஷா(55). இவர் நேற்றிரவு ரோந்து பணியை முடித்துவிட்டு இன்று அதிகாலை ராணிப்பேட்டை காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றார். காரை கலவை அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பவர் ஓட்டினார்.

அதிகாலை 4 மணியளவில் ஆற்காடு அண்ணா சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் எதிரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் கார் மோதியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உஷா படுகாயமடைந்தார். டிரைவர் காயமின்றி தப்பினார். மேலும் மின்கம்பம் உடைந்து சாய்ந்தது. படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உஷாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்கம்பத்தில் கார் மோதி பெண் எஸ்ஐ படுகாயம் appeared first on Dinakaran.

Tags : SI ,Arcot ,Usha ,Thimiri ,Ranipet district ,Ranipet ,
× RELATED இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா...