×

கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலத்தில் ரூ.14.50 கோடியில் பாலம்

கரூர்: இந்திய அளவில் தேசிய நெடுஞ்சாலை 60 கிலோமீட்டர் செல்லும் ஒரே மாவட்டம் கரூர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் கரூர் மாவட்டத்திற்கு ஒரு சிறப்பாகும். கரூர் மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி கோட்டையில் தொடங்கி கரூர் மாவட்டம் விட்டுப் பாளையம் பகுதியில் முடிகிறது. கரூர் மாவட்டத்தில் காலனி, ஆறு ரோடு சுக்காலியூர் ஆண்டாங் கோயில், பெரியார் வளைவு, கரூர் கோவை ரோடு ரவுண்டானா குளத்துப்பாளையம் ரயில்வே பாலம் அருகில், காதப்பாறை கொங்கு பள்ளி அருகே, எம்.குமாசாமி பொறியியல் கல்லூரி பகுதி, புகளூர் நால்ரோடு ஆகிய பகுதிகளிபொதுமக்கள் நலன் கருதி உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் மண்மங்கலம் அருகே கரூர் செம்மடையில் மாவட்ட திமுக செயலாளர் செந்தில்பாலாஜி, ஜோதிமணி எம்பி ஆகியோர் தீவிர முயற்சியால் ஒரு பாலம் அமைக்கப்பட்டு கடந்த 8 மாதங்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த 8 மாதங்களாக கரூர் செம்படை பகுதியில் கணிசமான அளவு விபத்துக்கள் குறைந்துள்ளது. இந்நிலையில் மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதால் நீண்ட நாட்களாக கரூர் மாவட்ட செயலாளர் வி.செந்தில் பாலாஜி, ஜோதிமணி எம்பி ஆகியோரிடம் தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.

இதன் அடிப்படையில் ரூ.14.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மண்மங்கலம் உயர்மட்ட பாலம் கீழே பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாகவும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது பாலம் கட்டும் போதியில் கான்கிரீட் வேலை முழுமையாக நடைபெற்று அதன் பின் சிமெண்ட் சிமெண்ட் கலவை போட்டு ஒன்றரை கிலோ மீட்டர் பகுதிக்கு அணுகு சாலை பணியும் தீவிரமாக நடைபெற்ற நிலையில், கடந்த சில நாட்களாக மழை காரணமாக பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இருப்பினும் இப்பணி நிறைவு பெற்றால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

குறிப்பாக மண்மங்கலம், தவிட்டுப்பாளையம், கடம்பங்குறிச்சி, ராமேஸ்வரபட்டி, கவுண்டம்புதூர் ஒரத்தை ஆகிய பகுதியில் செல்லும் பொதுமக்களுக்கு இந்த பாலம் மிகச்சிறந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் மண்பொங்கல் மண்மங்கலம் பகுதி பொதுமக்கள் என்எஸ் 7 சாலை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே கோரிக்கை வைத்த நிலையில் இப்போது தான் நிறைவு பெற்றிருப்பது ஒரு வரவேற்க தகுந்த செயலாகும். இருப்பதும் தற்போது உள்ள நிலையில் பாலப் பணிகளை விரைந்து முடி த்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்க ளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலத்தில் ரூ.14.50 கோடியில் பாலம் appeared first on Dinakaran.

Tags : Manmangalam ,Karur-Salem National Highway ,Karur ,India ,Antipatti fort ,Kittipalayam ,Dinakaran ,
× RELATED கரூரில் சேதமடைந்துள்ள நிழற்குடைகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை