×

பூச்சி மருந்து குடித்து ஐடி ஊழியர் தற்கொலை

கடலூர், ஆக. 17: கடலூர் முதுநகர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரம் மேட்டு காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் வெங்கடகிருஷ்ணன் (24). இவர் இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு மாதமாக மன அழுத்த நோய் இருந்ததால், அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டுக்கு வந்த அவர், மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் அவர் நொச்சிக்காட்டில் உள்ள ஒரு சவுக்கு தோப்பில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூச்சி மருந்து குடித்து ஐடி ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Velmurugan ,Venkatakrishnan ,East Ramapuram Mettu Colony ,Cuddalore Muthunagar ,Bengaluru ,Dinakaran ,
× RELATED இரவு நேரங்களில் நோயாளிகள் கடும் அவதி...