×

ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க ஆந்திர சிஐடி போலீஸ் பரிந்துரை..!!

ஆந்திரா: ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க விஜயவாடா போலீஸ் ஆணையருக்கு ஆந்திர சிஐடி போலீஸ் பரிந்துரை செய்துள்ளது. ஆந்திராவில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடத்தியதால் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போட்டிகளை நடத்த 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், டெண்டர் வழங்கியதில் முறைகேடு என புகார் எழுந்தது. ஊழல், முறைகேடு குறித்து ஆந்திரா சிஐடி போலீசாரிடம் புகார் அளித்த பல தரப்பினர். ரோஜாவை, எந்த நேரத்திலும் விஜயவாடா காவல் ஆணையர் அலுவலகம் விசாரணைக்கு அழைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க ஆந்திர சிஐடி போலீஸ் பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Tags : Andhra CIT Police ,minister ,Roja ,Vijayawada Police ,Gelo India Games ,Andhra Pradesh ,
× RELATED திருப்பதி லட்டு விவகாரம்...