×

கதம்ப வண்டு கடித்து 24 பேர் காயம்

சிவகங்கை, ஆக. 14: சிவகங்கை அருகே சுந்தரநடப்பு அழகுநாச்சியம்மன் கோயிலில் நேற்று ஆடித் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் ஏராளமானோர் நேர்த்திக்கடனாக தீச்சட்டி எடுத்தனர். கண்மாய் கரையோரம் சென்றபோது அப்பகுதியில் இருந்த ஆலமரத்திலிருந்து கதம்ப வண்டுகள் கிராமத்தினரை நோக்கி வந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் சாய் (3), லட்சுமி, கணேசன், லித்திகாஸ்ரீ, நந்தினி, முகிநாத், சுஜூ, ஸ்ரீதர்ஷினி உள்ளிட்ட 24க்கும் மேற்பட்டோரை வண்டுகள் கடித்தன. இதில் காயமடைந்த 24 பேர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் சுந்தரநடப்பு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கதம்ப வண்டு கடித்து 24 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Aadi festival ,Sundaranadapu Akkunachyamman Temple ,Kanmai ,
× RELATED நாளை ரேசன் குறைதீர் கூட்டம்