×

ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த எஸ்ஐ உடல் உறுப்புகள் தானம்: உறவினர்களுக்கு பாராட்டு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த எஸ்ஐயின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த உறவினர்களுக்கு டாக்டர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மப்பேடு அருகே முதுகூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (58). நசரத்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய் வாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 9ம்தேதி தனது மனைவி புவனேஸ்வரி (56) என்பவருடன் பூந்தமல்லி சென்று பூஜை பொருள் வாங்கிகொண்டு, மண்ணூர் சாலை வழியாக பைக்கில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.

சின்ன வளர்புரம் அருகே வந்தபோது, பைக்கின் பின் டயர் பஞ்சராகியுள்ளது. நிலைதடுமாறியதால் இருவரும் பைக்குடன் சாலையோரத்தில் விழுந்தனர். இதில் படுகாயமடைந்த எஸ்ஐ பழனியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மூளைச்சாவு அடைந்து பலியானார்.

புவனேஸ்வரி லேசான காயத்துடன் தப்பியுள்ளார். இதனிடையே பழனியின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் போதிய குளிர்சாதன வசதியில்லாததால் எஸ்ஐயின் உடல் உறுப்புகளை தானம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் எஸ்ஐ உடல் தனியார் மருத்துவ மனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. எஸ்ஐயின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ள உறவினர்களுக்கு அப்பகுதி மக்களும், டாக்டர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த எஸ்ஐ உடல் உறுப்புகள் தானம்: உறவினர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : SI ,Sriprahumudur ,Sribhuputur ,Sriprahumutur ,PALANI ,MUDUGUR ,Nasaratpet ,station ,
× RELATED விசாரிக்கும் போது அடித்ததற்கு...