×

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தியே: தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தி என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. ஓய்வு வயதை 62-ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை, அப்படி எந்த ஆலோசனையும் இல்லை. ஓய்வுவயது குறித்து சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வுவயது குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

The post அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தியே: தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,
× RELATED மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு