×

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு யூடியூபர் சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில் யூடியூபர் சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசுதல் மற்றும் அரசுக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக தமிழகம் முழுவதும் யூடியூபர் சங்கர் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி யூடியூபர் சங்கரின் தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, யூடியூபர் சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யப்பராஜ், அவசரகதியில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஒரே பேட்டியை மையமாக வைத்து குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதுஎன்று வாதிட்டார்.

அரசு தரப்பில், அனைத்து பெண் காவலர்களையும் சங்கர் தவறாக பேசியுள்ளார். அரசுக்கு எதிராக அவர் தொடர்ந்து பேசியதால், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போதிய காரணங்கள் இல்லாமல் அவசரகதியில் யூடியூபர் சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. எனவே, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

The post பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு யூடியூபர் சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Shankar ,Chennai ,Madras High Court ,Dinakaran ,
× RELATED அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர்...