×

கும்பகோணம் அருகே சரக்கு வண்டியில் மணல் கடத்தல்: 2 பேர் கைது

 

கும்பகோணம், ஜூலை 27: கும்பகோணம் அருகே ராஜகிரியில் சரக்கு வண்டியில் 9 மணல் மூட்டைகளை திருடிவந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்  வட்டாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராஜகிரி பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது குடமுருட்டி ஆற்றில் இருந்து 9 மணல் மூட்டைகளை திருடி வந்தது தெரியவந்தது. வங்காரம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (47) மற்றும் ஜாஃபர் சாதிக் (27) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் போலீஸார் சரக்கு வண்டியையும், 9 மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

The post கும்பகோணம் அருகே சரக்கு வண்டியில் மணல் கடத்தல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Rajagiri ,Thanjavur district ,Papanasam ,Thiagarajan ,
× RELATED கும்பகோணம் அருகே காண்டாமிருக கொம்பு விற்க முயற்சி