×

கார் டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

தூத்துக்குடி,ஜூலை 27: தூத்துக்குடி புதுக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் மகன் சக்திவேல் (36). தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (46). கார் டிரைவர். சக்திவேல் தனது காரை மாரியப்பனிடம் அடகு வைத்துவிட்டு ரூ.1.5லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. 6 மாதங்களுக்கு பின்னர் பணத்தை கொடுத்துவிட்டு காரை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் காரை மாரியப்பன் திரும்ப தரவில்லை. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பரான சில்வர்புரம் செல்வராஜ் மகன் சுப்புராஜ் (35) ஆகிய இருவரும் சேர்ந்து பைக்கில் வந்து கொண்டிருந்த மாரியப்பனை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். மேலும் அவரை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயம் அடைந்த மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் சிப்காட் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து சக்திவேல் மற்றும் சுப்புராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post கார் டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Murugan ,Shaktivel ,Thoothukudi Pudukkottai ,Mariyappan ,Thoothukudi TMP Colony ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...