×

பூவநாதபுரத்தில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு

 

சிவகாசி, ஜூலை 26: சிவகாசி அருகே பூவநாதபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜகிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக சிவகாசி யூனியன் துணைத் தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான விவேகன்ராஜ் கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கலைமணிகாளிராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஈஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பத்மினி, உதவி செயற்பொறியாளர் தென்பாண்டி தமிழ், உதவி பொறியாளர் ராமமுனீஸ்வரன், ஊராட்சி செயலாளர் நாகராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பூவநாதபுரத்தில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Bhuvanathapuram ,Sivakasi ,Panchayat ,Dinakaran ,
× RELATED சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை