×

இபிஎப் குறைதீர்க்கும் கூட்டம்

 

ஈரோடு,ஜூலை26: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் 29ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மண்டல வைப்புநிதி ஆணையாளர் வீரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லூரியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் வரும் 29ம் தேதி பிஎப் உங்கள் அருகில் என்ற தலைப்பின் கீழ் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை தொழிலதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களும் கலந்து கொள்ளலாம்.

இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் காப்பீடு தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் முந்தை கூட்டங்களில் கலந்து கொண்டு மனு அளித்து தீர்வு காணப்படாதவர்கள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post இபிஎப் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Labor Provident Fund Corporation ,Viresh ,Provident Fund ,Dinakaran ,
× RELATED ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள தனியார்...