×

நத்தம் பட்டா மாறுதலுக்கு இணையதளம் பயன்படுத்தலாம்

 

திருவாரூர், ஜூலை 25: திருவாரூர் மாவட்டத்தில் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொது மக்கள் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளுமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,நத்தம் இணையவழி பட்டாமாறுதல் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர், நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி ஆகிய வட்டங்களில் இத்திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் https://tamilnilam.tn.gov.in/citizen வழியாக விண்ணப்பிக்கலாம். அதனடிப்படையில், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நத்தம் பட்டா வழங்கப்படும். மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போர்டல் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post நத்தம் பட்டா மாறுதலுக்கு இணையதளம் பயன்படுத்தலாம் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Collector ,Saru ,Natham Patta ,Natham ,Dinakaran ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி