×

கல்லூரி மாணவி மர்மச்சாவு

 

கும்பகோணம், ஜூலை 25: கும்பகோணத்தில் தனியார் தங்கும் விடுதியில் மாணவி மர்மமாக இறந்ததால் பரபர்ப்பு ஏற்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரை சேர்ந்த கல்லூரி ஒரு மாணவர் அதே ஊரில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இருவரும் உறவினர்கள். இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இருவரும் கல்லூரி செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.

தொடர்ந்து நேற்று கல்லூரி மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவன் தங்கும் விடுதி ஊழியர்கள் உதவியுடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மாணவியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். தகவலறிந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸார் விரைந்துவந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சம்பவம் நடந்த விடுதியை தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆசிஷ் ராவத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

 

The post கல்லூரி மாணவி மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Marmachavu ,Kumbakonam ,Bhoompukhar ,Mayiladuthurai district ,Thanjavur district ,Pattukottai ,Marmachau ,
× RELATED ஜாதி ரீதியான பேச்சு: கும்பகோணம்...